• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-04-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2018 மார்ச் மாத முதல் வாரத்தில் கண்டி மாவட்டத்தின் திகன, தெல்தெனிய மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் இடம்பெற்ற அமைதியின்மை காரணமாக பாதிக்கப்பட்ட தரப்புகளுக்கு நிவாரணம் வழங்குதல்
2018 மார்ச் மாத முதல் வாரத்தில் கண்டி மாவட்டத்தின் திகன, தெல்தெனிய மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் இடம்பெற்ற அமைதியின்மை காரணமாக மரணமடைந்த மூவருக்கும் ஒருவருக்கு 500,000/- ரூபா வீதம் அவர்களுடைய உறவினர்களுக்கு வழங்குவதற்கும் இந்த சம்பவத்தின் போது காயமடைந்த ஒருவருக்கு அரசாங்க மருத்துவ அறிக்கையினை அடிப்படையாகக் கொண்டு 250,000/- என்னும் உச்சத்திற்கு உட்பட்டு, நட்டஈடு செலுத்துவதற்குமாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.