• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-04-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இருப்பிடக்கூறு உரிமைகள் (விசேட ஏற்பாடுகள்) வரைவுச் சட்டமூலம்
காலத்தின் தேவையைக் கருத்திற் கொண்டு, வரைவு இருப்பிடக்கூறு உரிமைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தினை சட்டமாக்கும் பொருட்டு அமைச்சரவையினால் வழங்கப்பட்ட அங்கீகாரத்திற்கு இணங்க உரிய 'வரைவுச் சட்டமூலம்' சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 2009 ஆம் ஆண்டிற்கு முன்னர் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை யினாலும் ஏனைய அரசாங்க நிறுவனங்களினாலும் நிருமாணிக்கப்பட்ட கூட்டாதன வீடுகளின் உரிமையை அத்தகைய வீடுகளில் வசிக்கும் வதிவிடதாரி களுக்கு உடைமையாக்கிக் கொள்வதற்கு தடையொன்றாக காணப்பட்டுள்ள நடைமுறையிலுள்ள வரைவு இருப்பிடக்கூறு உரிமைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தில் உள்ளடக்கப்பட்ட ஏற்பாடுகளுக்கான தீர்வுகளை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அரசாங்கத்துக்கு உடைமையான கூட்டு ஆதனங்களின் பாதுகாப்பிற்கான ஏற்பாடுகளை வழங்குவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அதற்கமைவாக, இருப்பிடக்கூறு உரிமைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கும் பொருட்டும் அதன் பின்னர் அதனை அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டும் வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.