• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-04-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2014 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க நிருமாணிப்பு கைத்தொழில் அபிவிருத்தி சட்டத்திற்கான திருத்தம்
நிருமாணக் கைத்தொழிலின் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்தி, முறைமைப்படுத்தி மற்றும் நியமமாக்குவதன் மூலம் இலங்கையில் நிருமாணிப்பு கைத்தொழிலின் அபிவிருத்திக்கான ஏற்பாடுகளை வழங்கும் குறிக்கோளுடன் 2014 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க நிருமாணிப்பு கைத்தொழில் அபிவிருத்தி சட்டமானது சட்டமாக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நிருமாணக் கைத்தொழிலில் உள்ள செயற்பாடுகளின் முழு வீச்சினையும் இது உள்ளடக்காதபடியால் கைத்தொழிலின் சகல பிரிவுகளையும் அக்கறைதாரர்களையும் உள்ளடக்கும் பொருட்டு இச்சட்டம் திருத்தப்பட வேண்டுமென்று நிருமாணக் கைத்தொழிலுடன் தொடர்புபட்ட சகல அக்கறைதாரர்களினாலும் தொழில் வல்லுநர்களினாலும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. ஆதலால், உரிய சகல அக்கறைதாரர்களுடனும் உசாவுதலைச் செய்த பின்னரும் தீவிரமான கலந்துரையாடலின் பின்னரும் இச்சட்டத்தை திருத்தும் பொருட்டு இச்சட்டத்திற்கான வரைவுத் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அதற்கிணங்க, கூறப்பட்ட வரைவுத் திருத்தங்களின் அடிப்படையில், 2014 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க நிருமாணிப்பு கைத்தொழில் அபிவிருத்தி சட்டத்தினை திருத்துவதற்கான சட்டத்தினை வரையுமாறு சட்டவரைநருக்கு அறிவுறுத்தும் பொருட்டு வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.