• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-04-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க வெசாக் விழா - 2018
அதிமேதகைய சனாதிபதி அவர்களின் அனுசரணையின் கீழ், குருநாகல் மாவட்டத்திலுள்ள புராதன பிங்கிரிய தேவகிரி ரஜமகா விகாரையில் 'தெமுனு சித சுவ கெனதே' என்ற தொனிப்பொருளின் கீழ் ஶ்ரீ பௌத்த யுகத்தின் 2562 ஆம் ஆண்டின் அரசாங்க வெசாக் விழாவை நடாத்துவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆதலால், பௌத்த தத்துவங்களைப் பிரயோகிப்பதற்கு முக்கியத்துவத்தை வழங்கி, 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி தொடக்கம் மே மாதம் 02 ஆம் திகதி வரை வெசாக் வார காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்படும் பொருட்டு நிகழ்ச்சித்திட்டமொன்றும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது என்றும் ஆன்மீக மேம்பாட்டுடன் ஆசீர்வதிக்கப்பட்ட நிலைபேறான சமுதாயமொன்றை உருவாக்கும் நோக்குடன் அரசாங்க வெசாக் விழாவுடன் ஒருங்கிசைவாக சில நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன என்றும், புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.