• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-04-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மீன் உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் தரையிறக்கும் மீன்களின் தரத்தை மேம்படுத்துதல் என்பன சார்பில் மீன்பிடி படகுத் தொகுதிகளை மேம்படுத்துதல்
மீன் உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் தரையிறக்கும் மீன்களின் தரத்தை மேம்படுத்துதல் என்பன சார்பில் நாட்டிலுள்ள மீன்பிடி படகுத் தொகுதிகளை மேம்படுத்தும் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கருத்திட்டத்திற்கு 2018 வரவுசெலவுத்திட்டத்தில் 400 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. பயனாளியினால் 50 சதவீத பங்களிப்பினை ஏற்கும் அடிப்படையில் இந்த கருத்திட்டத்தின் ஊடாக 23 கடற்றொழில் படகுகளை நிருமாணிக்கும் பொருட்டு கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.