• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-04-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
றுகுணு மற்றும் வயம்ப பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல்
அரசாங்க பல்கலைக்கழகங்களில் நிலவும் இடவசதி உட்பட ஏனைய வசதிகளை விருத்தி செய்வதற்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கியுள்ளது. இதன் கீழ் 2018 வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்டுள்ள நிதியங்களைப் பயன்படுத்தி, றுகுணு மற்றும் வயம்ப பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக 3,939 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பீட்டு செலவின் கீழ், றுகுணு பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பீடத்துக்கான கட்டடமொன்றையும் பொறியியல் பீடத்தின் சமுத்திரக் கல்வி கேந்திர கட்டடமொன்றையும் நிருமாணிப்பதற்கும் வயம்ப பல்கலைக்கழகத்தில் தொழினுட்ப பீட கட்டடத்தை நிருமாணிப்பதற்குமாக உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கபீர் ஹஷிம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.