• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-04-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவனத்துக்கும் இந்தியாவின் அரசாங்க தொழில்முயற்சி நிறுவனத்துக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை யொன்றைச் செய்து கொள்ளல்
அரசாங்க துறையின் அகிலநாட்டு சேவையைச் சேர்ந்த உத்தியோகத்தர்களின் ஆற்றலையும் திறனையும் விருத்தி செய்யும் பொறுப்பினை வகிக்கும் இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவனத்தினால் அதன் கற்பித்தல் மற்றும் அபிவிருத்தி செயற்பாட்டினை விருத்தி செய்யும் நோக்கில் அங்கீகரிக்கப்பட்ட வௌிநாட்டு கல்வி நிறுவனத்துடன் அதன் உறவினை விரிவுபடுத்தி வருகின்றது. இதன் கீழ் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனமொன்றான Institute Of Public Enterprises (IPE) நிறுவனத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இந்த இரண்டு (02) நிறுவனங்களுக்கும் இடையில் கூட்டு பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல், கல்விமான்கள், மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளை பரிமாறிக்கொள்ளல், முகாமைத்துவ ஆலோசனைப் பணிகளையும் கூட்டு ஆராய்ச்சிகளையும் மேற்கொள்ளல் போன்ற துறைகள் தழுவப்படும். அரசாங்க துறையின் ஆற்றல் விருத்தியின் மூலம் அரசாங்க சேவை வழங்கலை வினைத்திறன் மிக்கதாக்கும் நோக்கில் உத்தேச புரிந்துணர்வு உடன்படிக்கையினைச் செய்து கொள்ளும் பொருட்டு பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.