• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-04-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சருவதேச அணுசக்தி முகவராண்மையுடன் செய்து கொள்ளப்பட்ட இலங்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் உடன்படிக்கையின் மேலதிக பின்னிணைப்பை நடைமுறைப்படுத்தல்
இலங்கை 1970 ஆம் ஆண்டில் அணுசக்தி ஆயுத பரவலை தடுப்பது பற்றிய சமவாயத்தில் கைச்சாத்திட்டதோடு, இந்த சமவாயத்தின் பொறுப்புக்கு அமைவாக இலங்கையினால் 1984 ஆகஸ்ட் மாதம் 06 ஆம் திகதி சருவதேச அணுசக்தி முகவராண்மையுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தும் உடன்படிக்கையொன்றைச் செய்து கொண்டுள்ளது. அணு பொருட்கள் மற்றும் தொழினுட்பம் என்பன சமதான செயற்பாட்டுக்காகவன்றி அணு ஆயுத உற்பத்திக்காக பயன்படுத்தப் படமாட்டாதென்பதை உறுதிப்படுத்துவது அதன் பிரதான குறிக்கோளாகும். அணுசக்தி எரிபொருள் வழங்கும் மொத்த சூத்திரம் மற்றும் அதற்கு உதவும் அடிப்படை அம்சங்கள் சம்பந்தமான தகவல்களை பெற்றுக் கொள்வதற்கு இயலுமாகும் வகையில் உரிய பாதுகாப்பு ஏற்பாட்டு முறைமையினை மேலும் பலப்படுத்தும் நோக்கில் உரிய உடன்படிக்கையின் தரப்பு நாடுகளுக்கும் சருவதேச அணுசக்தி முகவராண்மைக்கும் இடையில் மேலதிக பின்னிணைப்பொன்றை கைச்சாத்திடும் பிரேரிப்பொன்று 1997 ஆம் ஆண்டில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு, 2017 ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து 129 நாடுகள் இந்த பின்னிணைப்பில் கைச்சாத்திட்டுள்ளன. சமாதான நோக்கங்களுக்காக மாத்திரம் அணு பொருட்களையும் தொழினுட்பத்தையும் பயன்படுத்துவதில் இலங்கைக்குள்ள அர்ப்பணிப்பினை எடுத்துக் காட்டும் முகமாக இந்த பின்னிணைப்பிலுள்ள ஏற்பாடுகளை இலங்கையில் நடைமுறப்படுத்துவதற்குத்தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.