• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-04-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
துறைமுகத்துடன் தொடர்புடைய வசதிகளை ஏற்படுத்துவதற்காக புளுமெண்டால் பிரதேசத்தை அபிவிருத்தி செய்தல்
கொழும்பு துறைமுகத்துடன் தொடர்புடைய தொழிற்பாட்டு பணிகளுக்காகவும் வர்த்தக மற்றும் வதிவிட அபிவிருத்தி நோக்கத்திற்காகவும் கொழும்பு புளுமெண்டால் பிரதேசத்தை அபிவிருத்தி செய்யவேண்டுமென கண்டறியப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகத்தின் கப்பல் சரக்கு தொழிற்பாட்டு பணிகளை மேம்படுத்துதல் அதன் வினைத்திறனை விருத்தி செய்தல் என்பன இதனூடாக எதிர்பார்க்கப்படுகின்றதோடு, இதனால் நாட்டின் ஏற்றுமதி இறக்குமதி பணிகளை வினைத்திறனுடன் செய்யமுடியும். புளுமெண்டால் பிரதேசத்திற்கு அண்மையில் குறைந்த வசதிகளுடன் கூடிய வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு சுகாதார பிரச்சினைகள் அற்ற பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி அவர்களுக்கு சிறந்த உயர் வாழ்க்கைத் தரமொன்றை உறுதி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன், இலங்கை சுங்கத் திணைக்களத்தின் உறுதிப்படுத்தல் நிலையம் நகர பொழுதுபோக்கு பூங்கா, கிம்புலாஎல நீரேந்து பிரதேசம் என்பவற்றை விஸ்தரித்தல் மற்றும் மேலதிக புகையிரத வீதி வசதிகளை விருத்தி செய்தல் போன்ற நிருமாணிப்புகளும் இதன்கீழ் செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. மேற்போந்த அபிவிருத்தி பணிகளை செய்யும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.