• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-04-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
100 வயதிற்கு மேற்பட்ட சிரேட்ட பிரசைகளுக்கு மாதாந்த கொடுப்பனவொன்றை வழங்குதல்
100 வயதிற்கு மேற்பட்ட சிரேட்ட பிரசைகள் நாடொன்றில் இருப்பது அந்நாட்டின் சுகாதாரத் துறையின் வளர்ச்சியை எடுத்துக் காட்டும் அளவுகோலாக கருதப்படுகின்றது. தற்போது 100 வயதிற்கு மேற்பட்ட சிரேட்ட பிரசைகள் சுமார் 350 பேர்கள் இலங்கையில் வசிக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது. இதற்கமைவாக, வாழ்க்கையின் பாதுகாப்பு மற்றும் நலனோம்பலை உறுதி செய்யும் நோக்கில் 100 வயதிற்கும் மேற்பட்ட சிரேட்ட பிரசைகள் சகலருக்கும் 5,000/- ரூபாவைக் கொண்ட மாதாந்த கொடுப்பனவொன்றை வழங்கும் பொருட்டு சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் மலைநாட்டு மரபுரிமைகள் அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.