2018-03-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கொட்டுகொட, கொலன்னாவ, பாதுக்க, ஹொரண, தெஹிவளை மற்றும் மாதம்பை நெய்யறி உபமின் நிலையங்களின் மேம்படுத்துகை - பசுமை சக்தி அபிவிருத்தி மற்றும் சக்தி வினைத்திறன் மேம்பாடு தொடர்பான முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கொட்டுகொட, கொலன்னாவ, பாதுக்க, ஹொரண, தெஹிவளை மற்றும் மாதம்பை நெய்யறி உபமின் நிலையங்களை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தங்களை தொழினுட்ப மதிப்பீட்டுக் குழுவினதும் கொள்வனவுக் குழுவினதும் சிபாரிசுகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, 2,214.16 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு M/s ABB India Ltd., கம்பனிக்கு கையளிக்கும் பொருட்டு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |