2018-03-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
காங்கேசன்துறை துறைமுகத்தின் புனரமைப்பு வேலைகளை செய்தல் - அரசாங்கத்தின் அபிவிருத்தி கொள்கை கட்டமைப்புக்கு அமைவாக வடக்கு மற்றும் கிழக்கை பொருளாதார நுழைவு வலயமொன்றாக விருத்தி செய்யும் திட்டத்தின் பிரதான கருத்திட்டங்களில் ஒன்றாக காங்கேசன்துறை துறைமுகத்தை நிலையான வர்த்தக துறைமுகமொன்றாக புனரமைப்பதற்கு இனங்காணப்பட்டுள்ளது. இதற்காக இந்தியாவினால் வழங்கப்படும் நிதியினை பயன்படுத்தி காங்கேசன்துறை துறைமுகத்தில் தற்போதுள்ள இறங்குதுறை மற்றும் அலைதாங்கிச் சுவர் எப்வற்றை புனரமைப்பதற்கும் புதிய இறங்குதுறை ஒன்றை நிருமாணிப்பதற்குமான பணிகளை இலங்கை துறைமுக அதிகாரசபையினூடாக மேற்கொள்வதற்கும் இதற்குத் தேவையான பெறுகை மற்றும் தொழினுட்ப மதிப்பீட்டுக் குழுக்களை நியமிப்பதற்குமாக துறைமுகங்கள், கப்பற்றுறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |