2018-03-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அம்பதலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தை விரிவுபடுத்தும் கருத்திட்டம் - 2020 ஆம் ஆண்டளவில் கொழும்பு மாவட்டத்தின் நாளாந்த நீர் தேவை 863,602 கனமீற்றர் வரை அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஆதலால், இந்த நீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக அம்பதலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் நீர் சுத்திகரிப்பு ஆற்றலை நாளொன்றுக்கு 50,000 கன மீற்றர்களால் அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக, முன்னுரிமைக் கருத்திட்டமொன்றாகக் கருதி அம்பதலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தை விரிவுபடுத்தும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |