• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-03-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மாகாண மற்றும் மாவட்ட விளையாட்டுத்துறை கட்டடத் தொகுதிகளின் நிருவாகம் தொடர்பாக கூட்டு வேலைத்திட்டமொன்றை தயாரித்தல்
- விளையாட்டுத்துறை உட்கட்டமைப்பு வசதிகளை கிராமத்துக்கு கொண்டு செல்வதன் மூலம் சருவதேச போட்டிகளை வெற்றி கொள்ளகூடிய கிராமிய ரீதியில் விளையாட்டு வீர வீராங்கனைகளை உருவாக்கும் நோக்கில் முழு நாட்டினையும் தழுவும் விதத்தில் 09 மாகாண விளையாட்டுத்துறை கட்டடத் தொகுதிகளையும் 16 மாவட்ட விளையாட்டுத்துறை கட்டடத் தொகுதிகளையும் நிருமாணிக்கும் கருத்திட்டமொன்று அரசாங்கத்தினால் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் கீழ் அநுராதபுரம், பதுளை, திருகோணமலை, கண்டி ஆகிய பிரதேசங்களில் நிருமாணிக்கப்பட்டுள்ள 04 மாகாண விளையட்டுத்துறை கட்டடத் தொகுதிகளினதும் களுத்துறை, மாத்தறை, பொலன்நறுவை மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் நிருமாணிக்கப்பட்டுள்ள 05 மாவட்ட விளையாட்டுத்துறை கட்டடத் தொகுதிகளும் பொது மக்களுக்காகத் திறந்து விடப்பட்டுள்ளது. ஏனைய விளையாட்டுத்துறை கட்டடத் தொகுதிகளின் நிருமாணிப்புகளும்கூட பொதுமக்களின் உரிமைக்கு கையளிக்கப்படும். ஏனைய விளையாட்டுத்துறை கட்டடத்தொகுதிகளின் நிருமாணிப்பு இந்த ஆண்டினுள் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த விளையாட்டுத்துறை கட்டடத் தொகுதியை உரிய முறையில் நிருவகிப் பதற்கான கட்டமைப்பொன்றை தயாரிக்கும் பொருட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேக்கர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.