2018-03-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பெருந்தோட்ட முகாமைத்துவ மேற்பார்வை பிரிவுக்குப் பதிலாக பெருந்தோட்ட ஒழுங்குறுத்துகை மற்றும் இணக்க நிறுவனத்தை தாபித்தல் - காணிசீர்திருத்த சட்டங்களின் ஊடாக காணிசீர்திருத்த ஆணைக்குழுவுக்கு உடமையாக்கப்பட்ட காணிகள் பின்னர் மக்கள் தோட்ட அபிவிருத்தி சபைக்கும் அரசாங்க பெருந்தோட்ட கூட்டுத்தாபனத்துக்கும் உடமையாக்கப்பட்டதுடன், அதன் பின்னர் 23 பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு 1992 ஆம் ஆண்டிலிருந்து அமுலுக்கு வரும் விதத்தில் 53 வருட காலத்துக்கு குத்தகை உடன்படிக்கையின் கீழ் வழங்கப்பட்டுள்ளன. இந்த கம்பனிகளின் அரசாங்கத்தின் உரிமை சம்பந்தமான மேற்பார்வை பணிகள் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் கீழ் பெருந்தோட்ட முகாமைத்துவ மேற்பார்வை பிரிவின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றது. குத்தகைக் காலப்பகுதியில் மேலும் எஞ்சியுள்ள 28 வருட காலப்பகுதியினுள் அரசாங்கத்தின் உரிமையை போதுமானவாறு பாதுகாப்பதற்கு தற்போதுள்ள பெருந்தோட்ட முகாமைத்துவ மேற்பார்வைப் பிரிவுக்குப் பதிலாக தேவையான கண்காணிப்பு அதிகாரங்களுடன் பெருந்தோட்ட ஒழுங்குறுத்துகை மற்றும் இணக்க நிறுவனத்தை தாபிப்பதற்கான சட்டங்களை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திஸாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |