2018-03-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
புண்ணியபூமி அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு புண்ணியபூமி அபிவிருத்தி மீளாய்வுக் குழுக்களைத் தாபித்தல் - நாடு பூராவும் அமைந்துள்ள புண்ணியபூமிகளுக்கு வருகைதரும் பக்தர்கள் மற்றும் உல்லாச பயணிகள் சார்பிலுள்ள வசதிகளை விருத்தி செய்யும் தேவை கண்டறியப்பட்டுள்ளது. இதன் போது முறையான நிருவாக பொறிமுறை மற்றும் வழிகாட்டல்களுடன் உரிய முறையில் புண்ணியபூமிகளை அபிவிருத்தி செய்வது முக்கியமானதாகும். இதற்கமைவாக, முறையான திட்டத்துக்கு அமைவாக புண்ணியபூமிகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இதற்கான அதிகாரங்களுடன் புண்ணியபூமி அபிவிருத்தி மீளாய்வுக் குழுக்களை அநுராதபுரம், கதிர்காமம், சேருவாவில, மாத்தளை அலுவிகாரை, மஹியங்கனை, களனிய, கோட்டை, தெவிநுவர, முத்தியங்கன, திஸ்ஸமஹாராம ஆகிய ஒவ்வொரு புண்ணியபூமிகள் சார்பிலும் தாபிக்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |