• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-03-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை இலகுரக புகையிரத போக்குவரத்து முறைமை தொடர்பிலான சட்டமூலம் - 2018
- கொழும்பு மாநகரத்தினுள் வினைத்திறன்மிக்கதும் பயனுள்ளதுமான பயணிகள் போக்குவரத்து முறையொன்றை தாபிப்பதற்காக இலகுரக புகையிரத போக்குவரத்து முறைமையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதன் கீழ் 07 இலகுரக புகையிரத பாதைகளை நிருமாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதோடு, கொழும்பு நகரத்தினுள் செல்லும் இலகுரக புகையிரத பாதைக்கும் பொரள்ளையிலிருந்து பத்தரமுல்லை ஊடாக மாலம்பே வரை செல்லும் இலகுரக புகையிரத பாதைக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டில் கொழும்பு இலகுரக புகையித முறைமையின் செயற்பாட்டு பணிகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த இரண்டு பாதைகளையும் நிருமாணிப்பதற்கு நிதியளிக்கும் யப்பான் சருவதேச ஒத்துழைப்பு முகவராண்மையுடன் உள்ள உடன்பாட்டுக்கு அமைவாக இந்த பாதைகளை நிருமாணிப்பதற்கு முன்னர் அதற்குரிய ஒழுங்குறுத்துகை கட்டமைப்பானது தயாரிக்கப்படுதல் வேண்டும். இதற்கமைவாக, உத்தேச இலகுரக புகையிரத முறைமையின் ஒழுங்குறுத்துகை மற்றும் முகாமைத்துவம் சார்பில் சட்ட நிறுவனமொன்றைத் தாபிப்பதற்கும் உரிய ஏனைய சட்ட ஏற்பாடுகளை செய்வதற்கும் இலங்கை இலகுரக வரைவு புகையிரத போக்குவரத்து சட்டமூலத்தை வரைவதற்கு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டும் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.