2018-03-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ஊடகவியலாளர்களுக்கான சனாதிபதி ஊடக பரிசளிப்பு விழாவொன்றை நடாத்துதல் - ஊடகவியலாளர்களின் பல்வேறுபட்ட ஆற்றல்களையும் விசேட திறன்களையும் இனங்கண்டு அவற்றை மதிப்பிடு வதற்கும் தொழில் ரீதியிலான ஊடகவியலாளர்களை உருவாக்குவதற்கு சரியான வழிகாட்டல்களை வழங்கி அவர்களை ஊக்குவிப்பதற்கும் சிறந்த சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்கு மொத்த ஊடகத்துறையை பலப்படுத்துவதற்கும் அபிவிருத்தியடைந்த ஊடக காலாசாரமொன்றை கட்டியெழுப்புவதற்கு ஊடகவியலாளர்களை ஊக்குவிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக இலங்கை ஊடகவியாலாளர்களினால் நிறைவேற்றப்படும் பணி மற்றும் அவர்களின் பங்களிப்பினை மதிப்பிடுவதற்காக சனாதிபதி ஊடக பரிசளிப்பு விழாவொன்றை 2018 ஆம் ஆண்டிலிருந்து வருடாந்தம் நடாத்தும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |