• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-03-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புத்தாக்குநர்களை கைத்தொழில்களில் ஈடுபடுத்துதல்
- புத்தாக்குநர்களுக்கு கைத்தொழில்களில் ஈடுபடும் வாய்ப்புகளை ஏற்பாடு செய்வதற்கு 2018 வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் பிரேரிக்கப்பட்டுள்ளதோடு, இதன் நோக்கமாவது பதிவுசெய்யப்பட்ட ஆக்கவுரிமை உரிமப் பத்திரமொன்றையோ பொருத்தமான வர்த்தக நோக்கத்துடனான பல்கலைக்கழக பட்டதாரிகள் மற்றும் தேசிய தொழிற்தகைமை சான்றிதழ் கொண்டுள்ளவர்கள் ஆகியோர்களை கைத்தொழில்களுடன் தொடர்புபடுத்துதலாகும். இதன்போது புத்தாக்குநர்கள் உரிய கைத்தொழில்களில் ஈடுபடுத்தப்படுவதோடு, அவர்களுடைய மாதாந்த சம்பளத்திலிருந்து 50 சதவீதம் சார்பில் பங்களிப்பு செய்வதற்கும் (50,000/- ரூபா 24 மாதங்கள் என்னும் உச்சத்துக்கு உட்பட்டு) இதற்கு மேலதிகமாக ஆக்கவுரிமை உரிமைப் பத்திரங்களை பெற்றுக் கொள்வதற்கு இலங்கையில் ஏற்கவேண்டி நேரிடுகின்ற செலவுகளையும் ஆலோசனைகளையும் வழங்குவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.

இதற்கமைவாக, இதற்கான விண்ணப்பதாரர்களையும் கூட்டு கம்பனிகளையும் தெரிவு செய்வதற்கான தகவு திறன்களை தீர்மானித்தல், நிறுவனங்களுக்கான விண்ணப்பதாரர்களையும் நிறுவனங்களையும் தெரிவு செய்தல் அடங்கலாக இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், அதனை வெற்றி கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்தல் என்பவற்றுக்காக வழிநடத்தல் குழுவொன்றையும் இந்த வழிநடத்தல் குழுவுக்கு உதவும் பொருட்டு தொழினுட்ப மதிபீட்டு குழுவொன்றையும் நியமிப்பதற்கு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.