2018-03-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தல்பிட்டிகல நீர்த்தேக்க கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கடன் வசதிகளை பெற்றுக் கொள்ளல் - தல்பிட்டிகல நீர்த்தேக்க கருத்திட்டத்தின் மொத்த மதிப்பீட்டு செலவு 174 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களாவதோடு, இதில் 85 சதவீதத்தை தழுவுவதற்கு சீனாவின் ஏற்றுமதி - இறக்குமதி வங்கியிடமிருந்து கடன் தொகையொன்றை பெற்றுக் கொள்ளும் பொருட்டு அமைச்சரவையின் அங்கீகாரம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. கருத்திட்ட செலவின் மீதி 15 சதவீதத்தை தழுவுவதற்கு 26.1 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட கடன் தொகையொன்றை மக்கள் வங்கியிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கும் இவற்றுக்கான கடன் உடன்படிக்கைகளைச் செய்து கொள்வதற்கும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |