2018-03-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்திற்கும் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் மூலோபாய கற்கைகள் நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடுதல் - தேசிய பாதுகாப்பு கற்கை தொடர்பான செயற்பாடுகள் தொடர்பில் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் குறிக்கோளுடன் இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்திற்கும் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் மூலோபாய கற்கைகள் நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடுவதற்கு பிரேரிப்பொன்று செய்யப்பட்டுள்ளது. அதற்கிணங்க, பிரேரிக்கப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப் பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |