• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-03-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை பண்டாரநாயக்க சருவதேச இராசதந்திர பயிற்சி நிறுவனத்துக்கும் பாகிஸ்தான் வௌிநாட்டு சேவைகள் அக்கடமிக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுதல்
- பயிற்சி மற்றும் தொழில்சார் அபிவிருத்தி தொடர்பில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் இராசதந்திர சேவைகளின் உத்திகேத்தர்களுக்கிடையிலான ஒத்துழைப்பினை மேம்படுத்தும் நோக்குடன் இலங்கை பண்டாரநாயக்க சருவதேச இராசதந்திர பயிற்சி நிறுவனத்துக்கும் பாகிஸ்தான் வௌிநாட்டு சேவைகள் அக்கடமிக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு பிரேரிப்பொன்று செய்யப்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளினதும் வௌிநாட்டுச் சேவை உத்தியோகத்தர்களுக்கிடையில் இணைப்பினை மேம்படுத்துவதற்கும் மற்றும் வௌிநாட்டுக் கொள்கைகள், சருவதேச உறவுகள், சருவதேச சட்டம் மற்றும் இராசதந்திர நடவடிக்கைகள் ஆகிய துறைகளில் இவ்விரு நாடுகளினதும் வௌிநாட்டுச் சேவை உத்தியோகத்தர்களுக்கிடையில் தகவல்களை பரிமாற்றிக் கொள்வதற்குமான சந்தர்ப்பத்தை இது உருவாக்கும். அதற்கிணங்க, அதிமேதகைய சனாதிபதி அவர்கள் பாகிஸ்தானுக்கு மேற்கொள்ளவுள்ள உத்தியோகபூர்வ விஜயத்தின் போது பிரேரிக்கப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.