• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-03-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பில் 70 ஆவது உலக சுகாதார தினத்தைக் கொண்டாடுதல்
- 2018 ஆம் ஆண்டில் நடாத்தப்படவுள்ள உலக சுகாதார அமைப்பின் 70 ஆவது ஆண்டு நிறைவினை "எங்கும் யாவர்க்கும் உலகளாவிய சுகாதார பாதுகாப்பு" என்னும் தொனிப்பொருளின் கீழ் கொண்டாடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அபிவிருத்தியடைந்த நாடுகளில் காணப்படும் சுகாதார சுட்டெண்களின் மட்டத்தினை கிட்டியுள்ள நாடொன்றாக இலங்கையிலே இந்த ஞாபகார்த்த ஆண்டு விழாவினை கொண்டாடுவது பொருத்தமானதென கண்டறியப்பட்டுள்ளது. இதன் பொருட்டு உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதிகள், 12 நாடுகளை சேர்ந்த சுகாதார அமைச்சர்கள், 11 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் சுகாதார துறையினை பிரதிநிதித்துவப்படுத்தும் உயர் மட்ட உத்தியோகத்தர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதற்கமைவாக உலக சுகாதார அமைப்பின் 70 ஆவது ஆண்டு நிறைவினை கொண்டாடும் முகமாக நடாத்தப்படவுள்ள உலக சுகாதார தின விழாவை 2018 ஏப்ரல் மாதம் 07 ஆம் திகதி கொழும்பில் நடாத்தும் பொருட்டு அனுசரணை வழங்குவதற்காக சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.