2018-03-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பேராதனைப் பல்கலைக்கழகத்துக்கும் நோர்வே இராச்சியத்தின் தென்கிழக்கு பல்கலைக்கழக கல்லூரிக்கும் இடையில் உயர்கல்வி துறையில் ஒத்துழைப்பு சம்பந்தமான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை செய்துக் கொள்ளல் - உயர்கல்வி துறையின் நெருங்கிய ஒத்துழைப்பினை மேம்படுத்திக் கொள்ளும் நோக்கில் பேராதனைப் பல்கலைக்கழகத்துக்கும் நோர்வே இராச்சியத்தின் தென்கிழக்கு பல்கலைக்கழக கல்லூரிக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை செய்துக் கொள்வதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. கூட்டு ஆராய்ச்சி மற்றும் கல்வி நிகழ்ச்சித் திட்டங்களை நடாத்துதல், கல்விசார் பதவியணியினரையும் மாணவர்களையும் பரிமாறிக் கொள்ளல், பாடநெறிகளின் அபிவிருத்தி போன்ற செயற்பாடுகள் உத்தேச புரிந்துணர்வு உடன்படிக்கையின் மூலம் தழுவப்படும். இந்த இரண்டு பல்கலைக்கழகங்களுக்குமிடையில் உரிய புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டு முன்னாள் உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு தற்போது இந்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கபீர் ஹஷிம் அவர்களின் உடன்பாட்டினையும் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |