2018-03-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
விமான நிலையத்தின் பயணிகள் ஓய்விடங்களுக்கு உணவு பான வகைகளை வழங்கும் சேவைகளின் பெறுகை - வியாபார வகுப்பு, முதல் வகுப்பு மற்றும் விசேட வகுதிகளைக் கொண்ட பயணிகளுக்காக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சருவதேச விமான நிலையத்தில் நான்கு (04) பயணிகள் ஓய்விடங்களையும் மத்தல ராஜபக்க்ஷ சருவதேச விமான நிலையத்தில் பயணிகள் ஓய்விடம் ஒன்றையும் (01) வரையறுக்கப்பட்ட விமான நிலையங்கள், விமான சேவைகள் (இலங்கை) கம்பனி நடாத்துகின்றது. இவ் ஓய்விடங்களின் சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் உள்நாட்டு அதேபோன்று வௌிநாட்டு விமான பயணிகளுக்கு உயர்தரமான உணவு பான வகைகளை வழங்குவது அத்தியாவசியமாகும். ஆதலால், இந்நோக்கத்திற்கான சாத்தியப்பாட்டைக் கொண்டிருக்கும், ஶ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்த M/s. Sri Lankan Catering Limited நிறுவனத்துக்கு எதிர்வரும் 03 வருட காலப்பகுதிக்கு இந்த ஒப்பந்தத்தை கையளிக்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |