2018-03-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மேல் எலஹெர கால்வாய் நிருமாண கருத்திட்டத்தின் கீழ், களுகங்கை - மொரகஹகந்த மாற்றீட்டு கால்வாய் நிருமாணம் - மேல் எலஹெர கால்வாய் நிருமாண கருத்திட்டத்தின் விடயநோக்கெல்லையின் கீழ் வருகின்ற களுகங்கை நீர்த்தேக்கத்திலிருந்து மொரகஹகந்த நீர்த்தேக்கம் வரையான 8 கிலோ மீற்றர் நீளம் கொண்ட இரண்டு சுரங்க வழிகளை உள்ளடக்கும் மாற்றீட்டு கால்வாய், திறந்த கால்வாய், கால்வாய் பாலங்கள் மற்றும் தொடர்புபட்ட கட்டமைப்புக்கள் ஆகியவற்றுக்கான வடிவமைப்பு மற்றும் கட்டுமாண ஒப்பந்தமானது மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. ஆதலால், அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, இந்த நிருமாண ஒப்பந்தத்தை 6,111.91 மில்லியன் ரூபா கொண்ட தொகைக்கு சீனாவின் Sinohydro Corporation Limited நிறுவனத்துக்கு கையளிக்கும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |