2018-03-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கொழும்பு மற்றும் கொலன்னாவவை பிரதேசங்களுக்கான வௌ்ளப்பெருக்கு கட்டுப்பாடு - கொழும்பு தலைநகரம் சார்ந்த நகர அபிவிருத்தி கருத்திட்டத்தின் கீழ் வௌ்ளப்பெருக்கு கட்டுப்பாட்டினை குறியிலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படும் பிரதான அபிவிருத்தி பணியொன்றாக கொலன்னாவ கால்வாய் திசைதிருப்பல் திட்டமானது இனங்காணப்பட்டுள்ளது. களனி கங்கையில் குறைந்த நீர் மட்டம் காணப்படும் காலப்பகுதியில் கொழும்பு பிரதேசத்திற்கு கிடைக்கும் மழைநீரை இதனுள் வழிந்தோடுவதற்காகவுள்ள கால்வாய்களை விஸ்தரிப்பதற்கும், களனி கங்கையில் உயர் நீர்மட்டம் நிலவும் சந்தர்ப்பங்களில் கொலன்னாவ பிரதேசத்தில் ஏற்படும் வௌ்ளப்பெருக்கு நிலைமையை குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்குமான பணிகள் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கமைவாக, சேதவத்த - அம்பதலே வீதியில் உள்ள கித்தம்பகுவ கால்வாய்க்கு குறுக்காக பிட்டவானைக்கு அருகாமையில் உள்ள நீர் கதவு கட்டமைப்பினை மீள நிருமாணித்து கால்வாயின் வழிந்தோடலுக்கு தடையாகவுள்ளவற்றை அப்புறப்படுத்துவதற்கும், அணைக்கட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. நீர்ப்பாசன திணைக்களத்தினதும் காலநிலை தாக்கத்தினை குறைக்கும் கருத்திட்டத்தின் உத்தியோகத்தர்களினதும் ஒத்துழைப்பினை பெற்றுக் கொண்டு, இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |