• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-03-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
முத்துராஜவெல மணல் நிரப்பும் பிரதேசத்தில் அமைந்துள்ள இரண்டு காணித் துண்டுகளை சேவைக் கருத்திட்டம் சார்பில் குத்தகை அடிப்படையில் வழங்குதல்
- வத்தளை, முத்துராஜவெல பிரதேசம் மேல் மகாண மாநகர திட்டத்திற்கு அமைவாக நிருமாணிக்கப்பட்டு வரும் சேவை நகரத்தின் ஒருபகுதியாக இனங்காணப்பட்டுள்ளது. இலங்கை காணி நிலமீட்பு, அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தினால் கடல் மணலை நிரப்புவதன் மூலம் இந்த பிரதேசத்தை அபிவிருத்தி செய்ததோடு, 400 ஏக்கர் காணியானது பல்வேறுபட்ட கருத்திட்டங்களுக்காக விடுவிக்கப்பட்டது.

இங்கு எஞ்சியுள்ள இரண்டு காணித் துண்டுகளை சேவைக் கருத்திட்டங்கள் சார்பில் குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு பத்திரிகை அறிவித்தல் மூலம் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இதற்காக கூடிய விலைகளை முன்வைத்துள்ள John Keells Logistics (Pvt) Ltd., நிறுவனத்திற்கு 30 வருட காலப் பகுதிக்கு இந்த இரண்டு காணித் துண்டுகளையும் குத்தகை அடிப்படையில் வழங்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.