2018-03-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பொல்தூவ துணை வீதியை "சுகுருபாய" விலிருந்து "கொஸ்வத்த சந்தி" வரை நீடித்தல் - பத்தரமுல்லை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் துரித அபிவிருத்தி காரணமாக கடுவெலை - கொழும்பு வீதியில் வாகன நெரிசலானது தீவிரமடைந்துள்ளதோடு, இதற்கு மாற்று வழியொன்றாக பொல்தூவ சந்தியிலிருந்து கொஸ்வத்த சந்தி வரை பத்தரமுல்லை நகரத்தை தவிர்த்து செல்லக்கூடிய வீதியொன்றை நிருமாணிக்கும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. பொல்தூவ சந்தியிலிருந்து "சுகுருபாய" வரை நுழைவு வீதியொன்றை நிருமாணிக்கும் பணிகள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதோடு, இந்த வீதியை உடுமுல்லை சந்தி வரை இரண்டு பாதை வீதிகளாக நீடிப்பதற்கும் அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. பத்தரமுல்லை பிரதேசத்தில் அதிகரித்து வரும் வாகன நெரிசலை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு இந்த வீதியை கொஸ்வத்த சந்தி வரை நீடிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக பொல்தூவ துணை வீதியை கொஸ்வத்த சந்தி வரை 4 கிலோ மீற்றர் நீளமான 4 பாதை கொண்ட வீதியொன்றாக நீடிக்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |