2018-03-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சி கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் - சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்களின் மூலதனம் அதேபோன்று தொழிற்படு மூலதன தேவைகளுக்கு நிதி வழங்குவதனை நோக்காகக் கொண்டு அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் 50 மில்லியன் ரூபா என்னும் உச்சத்தின் கீழ் 10 வருடங்களைக் கொண்ட மீள் செலுத்தல் காலத்துடன் நிதி வழங்கப்படும். இந்த கடன் திட்டத்தின் கீழ் தொழில் முயற்சியொன்றை ஆரம்பிப்பதற்கோ அல்லது உள்ள தொழில் முயற்சியொன்றை விரிவுபடுத்துவதற்கோ தேவையான கடன் வசதிகள் வழங்கப்படும். இந்த கடன் உதவி நிகழ்ச்சித்திட்டத்திற்கு 10 அரசாங்க மற்றும் தனியார் துறை வங்கிகள் கலந்து கொள்வதோடு, இந்த பங்களிப்பு நிதி நிறுவனங்களுடன் உரிய கடன் உடன்படிக்கைகளை செய்துகொள்ளும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |