• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-03-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வீட்டு வேலையாட்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு தொழில் சட்டங்களைத் திருத்துதல்
- இலங்கையில் பணிக்கமர்த்தப் பட்டுள்ள வீட்டு வேலையாட்களை தொடர்பான தொகைமதிப்பு இல்லாதிருக்கின்ற போதிலும், இத்தகையோர் பெருமளவில் பணியாற்று கின்றமை தௌிவாகும். இந்த வீட்டு வேலையாட்களின் உரிமைகனை பாதுகாப்பதற்கு தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லாமையினால், குறைந்த சம்பளத்தில் பணிக்கமர்த்துதல், லீவு வழங்காமை, சமூக பாதுகாப்பு கிடைக்காமை போன்ற சாதகமற்ற நிலைமைகளுக்கு இந்த சமூகம் முகம் கொடுத்துள்ளதென கண்டறியப்பட்டுள்ளது. தொழில் பிணக்கு சட்டம், ஊழியர் சேமலாப நிதியச் சட்டம் உட்பட ஏனைய தொழில் சட்டங்களில் வீட்டு வேலையாட்கள் நீக்கப்பட்டுள்ளதோடு இதன் காரணமாக இந்த வேலையாட்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு தொழில் திணைக்களத்திற்கு தலையிட முடியாமற்போயுள்ளது.

வீட்டு வேலையாட்களின் உரிமைகளை பாதுகாக்கும் தேவை 'தேசிய மனித உரிமைகள் செயற்ப்பாட்டுத் திட்டம் 2017-2021' மூலமும் இனங்காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக தொழில், தொழிற்சங்க உறவுகள் மற்றும் சப்பிரகமுவ அபிவிருத்தி அமைச்சர் டபிள்யு.டீ.ஜே.செனெவிரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, வீட்டு வேலையாட்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு சட்டத்தை வரைவதற்கு அமைச்சரவையினால் கொள்கை ரீதியில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.