2018-03-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கிரிதர நீர்வழங்கல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நிதி பெற்றுக் கொள்ளல் - தொம்பே பிரதேச செயலகப் பிரிவின் 18 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்குரிய பிரதேசங்களில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் நோக்கில், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் முன்னுரிமை கருத்திட்டமொன்றாக இனங்காணப்பட்டுள்ள கிரிதர நீர்வழங்கல் கருத்திட்டத்தை 513.28 மில்லியன் ரூபாவைக் கொண்ட செலவில் அமுல்படுத்துவதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டத்திற்குத் தேவையான நிதியினைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு உள்நாட்டு வங்கிகளிடமிருந்து பிரேரிப்புகள் கோரப்பட்டுள்ளதோடு, மக்கள் வங்கியிடமிருந்து இந்த கடன்தொகையைப் பெற்றுக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, கிரிதர நீர்வழங்கல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான 513.28 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகையினை பெற்றுக் கொள்வதற்கு மக்கள் வங்கியுடன் கடன் உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளும் பொருட்டு தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு அதிகாரத்தை கையளிப்பதற்காக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |