• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-02-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2018 சிறுபோகத்தில் நெற்செய்கைக்கு இரசாயன உரம் வழங்குதல்
- 2018 சிறுபோகத்தில் நெற்செய்கை பண்ணுவதற்கு எதிர்பாக்கப்படும் சுமார் 500,000 ஹெக்டயார் வயல்களுக்கு எதிர்வரும் ஏப்பிரல் மாதம் முதலாவது வாரத்திலிருந்து உரம் விநியோகிக்க வேண்டியுள்ளது. பொது பெறுகை நடவடிக்கை முறையை பின்பற்றி உரம் கொள்வனவு செய்யும் போது குறித்த இந்தக் காலப்பகுதிக்கு முன்னதாக உரம் இறக்குமதி செய்து விநியோகிப்பது கடினமானதாகையினால், துரித பெறுகை நடவடிக்கை முறையொன்றை பின்பற்றி போட்டி விலை கோரல் மூலம் பொருத்தமான வழங்குநர் ஒருவரை தெரிவு செய்து உரம் பெற்றுக் கொள்வதற்கும் இதன் சார்பில் அரசாங்க உர கம்பனிகளான வரையறுக்கப்பட்ட இலங்கை உர கம்பனி மற்றும் கொழும்பு கொமர்ஷல் உர கம்பனி ஆகிய இரண்டிற்கும் திறைசேரி உத்தரவாதங்களை வழங்குவதற்குமாக கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.