• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-02-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சுகாதாரம் மற்றும் மருத்துவ சேவை மேம்பாட்டுக் கருத்திட்டம்
- கடந்த காலப்பகுதியில் பொது மக்களிடையே இருதய நோய், பக்கவாதம் போன்ற தொற்றாத நோய்களை துரிதமாக அதிகரித்துள்ளன. நாட்டில் நிகழும் மரணங்களில் 75 சதவீதமானது தொற்றாத நோய்கள் காரணமாக ஏற்படுவதோடு, இதில் சுமார் 40 சதவீதத்திற்கு முக்கிய காரணம் இருதய நோயாகும். ஆதலால் தொற்றாத நோய்கள் விசேடமாக இருதய நோயை தடுப்பதற்கும் அதற்கு சிகிச்சை அளிப்பதற்கும் தேவையான சுகாதாரம் மற்றும் மருத்துவ சேவை வசதிகளை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இதன்கீழ் அநுராதபுரம், கண்டி, குருநாகல், பதுளை மற்றும் திருகோணமலை ஆகிய வைத்தியசாலைகளில் இந்த சிகிச்சை சேவைகளை விருத்தி செய்யும் நோக்கில் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு பிரேரிக்கப் பட்டுள்ளதோடு, இதற்கான நிதியினை வழங்குவதற்கு யப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மை உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்கமைவாக இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு 10,639 மில்லியன் யப்பான் யென்கள் கொண்ட கடன் தொகையைான்றைப் பெற்றுக் கொள்வதற்கு யப்பான் சர்வதேச ஒத்துழைபு முகவராண்மையுடன் கடன் இணக்கப்பேச்சுகளை நடாத்துவதற்கும் உரிய கடன் உடன்படிக்கைகளை செய்து கொள்ளும் பொருட்டும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.