2018-02-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பக்கவாத சிகிச்சை பிரிவொன்றை நிருமாணித்தல் - நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் நிகழும் மரணங்களுக்கு தாக்கத்தை செலுத்தும் நான்காவது பிரதான காரணி பக்கவாதமாகும். ஆதலால் பக்கவாத நோய்க்கு சிகிச்சையளிக்கும் முழுமையான வசதிகளை நாட்டின் பிரதான வைத்தியசாலைகளில் உருவாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது. இதன்கீழ் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பக்கவாத சிகிச்சை பிரிவொன்றை நிருமாணிப்பதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 633.97 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு M/s. Link Engineering (Pvt.) Ltd., நிறுவனத்துக்கு வழங்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |