2018-02-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பேராதனை பல்கலைக்கழகத்தின் நூதனசாலையில் ஆராய்ச்சி நோக்கங்களுக்கு அனுசரணை வழங்குதல் - பேராதனை பல்கலைக்கழகத்தின் 75 வருட கால நிறைவிற்கு ஒருங்கிணைவாக இந்த பல்கலைக்கழகத்தின் வரலாற்றுக்குரிய கலைப்படைப்புகளை ஒன்றுதிரட்டி எதிர்கால சந்ததியினர் பயன்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் பாதுகாக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நூதனசாலை கருத்திட்டத்தின் ஆராய்ச்சி மற்றும் அகழ்வு பணிகளுக்காக விசேட கடமைப்பொறுப்புக்கள் அமைச்சுக்கு 2018 ஆம் ஆண்டு சார்பில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஏற்பாட்டிலிருந்து 10 மில்லியன் ரூபாவை வழங்கும் பொருட்டு விசேட கடமைப்பொறுப்புக்கள் அமைச்சர் (கலாநிதி) சரத் அமுனுகம அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |