• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-02-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கட்டான தேசிய பொலிஸ் கல்வியகத்தில் தங்குமிடம் மற்றும் நிருவாக நோக்கங்களுக்கான கட்டடங்களை நிருமாணித்தல்
- இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர்களின் அறிவு, ஆற்றல், எண்ணம் ஆகியவற்றை விருத்திசெய்யும் நோக்கில் தாபிக்கப்பட்டுள்ளதும் கட்டான பிரதேசத்தில் அமைந்துள்ளதுமான தேசிய பொலிஸ் கல்வியகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை விருத்திசெய்வதன் கீழ் அதன் விடுதி மற்றும் நிருவாக கட்டடங்களை நிருமாணிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக 836.28 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிபீட்டு செலவின் கீழ் இந்த கட்டடங்களை நிருமாணிக்கும் கருத்திட்டமானது 2018 - 2020 காலப்பகுதிக்குள் நடைமுறைப்படுத்தும் பொருட்டு முன்னாள் சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.