• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-02-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இந்திய அரசாங்கத்தின் நிதி உதவி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பெருந்தோட்ட மக்களுக்கு 10,000 வீடுகளை நிருமாணித்தல்
- நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் வசிக்கும் பெருந்தோட்ட மக்களுக்கு 4,000 வீடுகளை நிருமாணிப்பதற்கு இந்திய அரசாங்கத்தினால் ஏற்கனவே நிதி உதவி செய்யப்பட்டுள்ளதோடு, இதில் 1,136 வீடுகளின் நிருமாணிப்பு பணிகள் பூர்த்தி செய்யும் நிலையில் உள்ளன. மீதி 2,836 வீடுகளின் நிருமாணிப்பு வேலைகள் 2018 சனவரி மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்திய பிரதம அமைச்சர் 2017 மே மாதம் இலங்கைக்கு மேற்கொண்ட சுற்றுலாவின் போது பெருந்தோட்ட மக்களுக்கு மேலும் 10,000 வீடுகளை நிருமாணிப்பதற்கு நிதி வழங்குவதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளார்.

மண்சரிவு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்கி இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பொருத்தமான காணிகளை இனங்காணும் பணிகள் 2018 மார்ச் மாதத்திலிருந்து செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கமைவாக, வீடொன்று 10 இலட்சம் ரூபா செலவில் பெருந்தோட்ட மக்களுக்கு 10,000 வீடுகளை நிருமாணிக்கும் இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இந்திய அரசாங்கத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளும் பொருட்டு மலையக புதிய கிராமங்கள், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் யூ.பழனி திகம்பரம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.