• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-02-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொலன்நறுவை, கிளிநொச்சி, இரத்தினபுரி மாவட்டங்களில் களஞ்சிய தொகுதிகளை நிருமாணித்தலும் முகாமைத்துவமும்
- உலர் வலய விவசாயிகளின் அறுவடையினைக் களஞ்சியப்படுத்துவதற்கு களஞ்சிய வசதிகளை ஏற்பாடு செய்யும் நோக்கில் அநுராதபுரம், மொனராகலை மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் நிருமாணிக்கப்பட்டுள்ள களஞ்சிய தொகுதிகள் இந்த மாவட்டங்களின் மாவட்ட செயலாளர்களின் மேற்பார்வையின் கீழ் தற்போது செயற்பட்டு வருகின்றன. தற்போது வேலைகள் பூர்த்திசெய்யப்பட்டு வருகின்ற பொலன்நறுவை, கிளிநொச்சி, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் களஞ்சிய தொகுதிகளை 2018 ஆம் ஆண்டினுள் செயற்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றதோடு, இந்த களஞ்சிய தொகுதிகளின் கையாள்கைப் பணிகளை மேற்கொள்வதற்கு பிராந்திய அபிவிருத்தி வங்கியுடன் முகாமைத்துவ ஒப்பந்த உடன்படிக்கைகளை செய்துகொள்ளும் அதிகாரத்தை உரிய மாவட்ட செயலாளர்களுக்கு கையளிப்பதற்கும் இந்தப் பணிகளின் ஒழுங்குறுத்துகை மற்றும் மேற்பார்வை குறித்த இந்த மாவட்டங்களின் மாவட்ட செயலாளர்களுக்கு கையளிப்பதற்குமாக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.