2018-02-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
வந்துரபீனு எல்ல நீர்த்தேக்கத்தின் நிருமாணம் கருதி சாத்தியத் தகவாய்வினையும் சுற்றாடல் தாக்க மதிப்பீட்டினையும் மேற்கொள்தல் - குருநாகல் நகரம் மற்றும் அதற்கண்மித்த பிரதேசங்களுக்கு குடி நீர் வழங்கும் போது பிரதான நீர் வளமூலமான தெதுறு ஓயாவின் நீரோட்டமானது வரண்ட காலப்பகுதிகளில் கணிசமான அளவு குறைவடைவது தொடர்ச்சியான நீர் விநியோகத்திற்கு பிரதான தடையாக உள்ளது. இதற்கு மாற்று வழியாக தெதுறு ஓயா ஆற்றுப்படுகையின் மேல் பிரதேசத்தில் நீர்த்தேக்கமொன்று நிருமாணிக்கப்பட வேண்டுமென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக, 3.6 மில்லியன் கன மீட்டர் கொள்ளளவினைக் கொண்ட வந்துரபீனு எல்ல நீர்த்தேக்கத்தை நிருமாணிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளதோடு, இதற்கான சாத்தியத் தகவாய்வினையும் சுற்றாடல் தாக்க மதிப்பீட்டினையும் மேற்கொள்ளும் பொருட்டு நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |