2018-02-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கொத்தணி குண்டு சம்பந்தமான சருவதேச சமவாயத்தை (ஒஸ்லோ சமவாயம்) இலங்கை ஏற்றல் - மோதல் நிலவிய காலப்பகுதியில் இலங்கை கொத்தணி குண்டு பயன்படுத்தியதாக பல்வேறுபட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும், இலங்கை பாதுகாப்பு பிரிவுகள் கொத்தணி குண்டுகளை பயன்படுத்தியமை பற்றி எந்தவித சாட்சிகளும் இல்லாததோடு, “இலங்கை எப்பொழுதும் கொத்தணி குண்டுகளை பயன்படுத்தவில்லையென்பதுவும் எதிர்காலத்தில் பயன்படுத்தாதென்பதுவும்" இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்.
கொத்தணி குண்டுகளை பயன்படுத்தாமல் இருப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பையும் அத்துடன் மனிதநேயம்மிக்க ஆயுதமற்ற நிலைபேறுடைய சமாதானம் மற்றும் நிலையான தன்மை சார்பில் இலங்கையின் அர்ப்பணிப்பையும் எடுத்துக்காட்டி தற்போது 102 நாடுகளினால் செயல்வலுவாக்கம் செய்துள்ள கொத்தணி குண்டு சம்பந்தமான சருவதேச சமவாயத்தை (ஒஸ்லோ சமவாயம்) இலங்கை ஏற்கும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
|