2018-02-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
விசாரணை ஆணைக்குழுக்கள் மூலம் எண்பிக்கப்படும் விடயங்களை அடிப்படையாகக் கொண்டு வழக்குத் தொடுக்கும் அதிகாரத்தை இலஞ்ச அல்லது ஊழல் முறைப்பாடுகள் பற்றி விசாரணைச் செய்யும் ஆணைக்குழுவிற்கு கையளித்தல் - 1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க விசாரணை ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் தாபிக்கப்படும் விசாரணை ஆணைக்குழுக்களின் மூலம் எண்பிக்கப்படும் விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இலஞ்ச சட்டத்தின் கீழ் அல்லது சொத்துக்கள், பொறுப்புகள் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுக்கும் அதிகாரத்தை இலஞ்ச அல்லது ஊழல் முறைப்பாடுகள் பற்றி விசாரணைச் செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் அதிபதிக்கு வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் சட்ட ஏற்பாடுகளைச் செய்யும் தேவை எழுந்துள்ளது. இதற்காக 1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க விசாரணை ஆணைக்குழுச் சட்டத்தை திருத்தும் பொருட்டிலான உரிய திருத்தங்கள் சட்டவரைநரினால் வரையப்பட்டுள்ளது. இந்த வரைவானது பாராளுமன்றத்தில் 2/3 இற்கு குறையாத விசேட பெரும்பான்மையில் அங்கீகரிப்பித்துக் கொள்ள வேண்டுமென சட்டமா அதிபரினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, விசாரணை ஆணைக்குழு (திருத்த) சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |