2018-02-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கொழும்பு மாநகர சபைக்கு தீயணைப்பு வாகனங்களை / உபகரணங்களை வழங்குதல் - கொழும்பு நகரத்திலும் புறநகர் பகுதிகளிலும் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு ஒத்திசைவாக, விசேடமாக பல அடுக்குமாடி கட்டடங்களில், வதிவிடதாரிகளின் உயிரையும் ஆதனங்களையும் பாதுகாப்பதை உறுதிப்படுத்துவதற்கு கொழும்பு மாநகர சபையிலுள்ள தீயணைப்புச் சேவை திணைக்களத்தை வலுப்படுத்துவது அவசியமாகும். அதற்கிணங்க, மிகையான செலவில் பராமரிக்கப்படும், இத்திணைக்களத்தின் தீயணைப்பு வாகன தொகுதிக்கு புதிய தீயணைப்பு வாகனங்களை / உபகரணங்களை வழங்குவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. ஆதலால், அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட இணக்கப்பேச்சுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, மேற்போந்த ஒப்பந்தத்தை 10.3 மில்லியன் யூரோவைக் கொண்ட தொகைக்கு ஒஸ்திரியாவிலுள்ள M/s.Rosenbauer International AG நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |