• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-02-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பசுமை சக்தி அபிவிருத்தி மற்றும் சக்தி வினைத்திறன் மேம்பாட்டு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மின்னறித் துணை நிலையத்தை அபிவிருத்தி செய்தல்
- ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் உதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் 'பசுமை சக்தி அபிவிருத்தி மற்றும் மின்சக்தி வினைத்திறன் மேம்பாட்டு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தில்' சேமிப்பாகவுள்ள மீதி நிதியை பயன்படுத்தி, பன்னல மின்னறித் துணை நிலையத்தை மேம்படுத்துவதற்கும், பன்னிபிட்டிய மற்றும் வெயாங்கொடை மின்னறித் துணை நிலையங்கள் சார்பில் இரு (02) மின்மாற்றிகளை கொள்வனவு செய்வதற்கும், களுத்துறை, கெஸ்பேவ, பழைய அநுராதபுரம், கப்பற்றுறை மற்றும் கெரவலபிட்டிய மின்னறித் துணை நிலையங்கள் சார்பில் ஐந்து 36kV GIS மின் இசைவாக்கத் தட்டுக்களை கொள்வனவு செய்வதற்கும் மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.