• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-02-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மத்திய அதிவேக பாதையின் 3 ஆம் பகுதியை நிருமாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
- மத்திய அதிவேக பாதையின் 3 ஆம் பகுதியான பொத்துஹெரயிலிருந்து றம்புக்கனை ஊடாக கலகெதர வரையான32.5 கிலோமீற்றர் விஸ்தீரணங் கொண்ட வீதிப் பகுதியை நிருமாணிப்பதற்காக 100 பில்லியன் யப்பான் யென் கொண்ட கடன் வசதியொன்றை வழங்குவதற்கு யப்பான் டோக்கியோ மிற்சுபிசி வங்கி (The Bank of Tokyo Mitsubishi) இணங்கியுள்ளது. ஆதலால், இந்த நிருமாண ஒப்பந்தத்தை M/s. Taisei Corporation யப்பான் நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.