2018-02-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
திட்டமிட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் செயலாற்றும் பொருட்டிலான தெற்காசிய வலய புலனாய்வு மற்றும் ஒருங்கிணைப்பு நிலையத்தைத் தாபித்தல் - தெற்காசிய வலயத்தில் திட்டமிட்ட குற்றச் செயல்கள், போதைப்பொருள் பாவனையை தடுக்கும் நோக்கில் இந்த வலயத்திலுள்ள நாடுகளுக்கு இடையில் புலனாய்வுத் தகவல்களை பரிமாறிக் கொள்ளும், ஒருங்கிணைக்கும் வலய மைய நிலையத்தை இலங்கையில் தாபிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இந்த நிலையத்தை இலங்கையில் தாபிப்பதற்கும் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை மனையிடத்தில் இதனை தற்காலிகமாக நிறுவுவதற்குமாக சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |