• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-02-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாராளுமன்ற அலுவலகம், தேசிய ஆணைக்குழு அலுவலகங்கள், அமைச்சரவை அலுவலகம் உட்பட வேறு ஒத்த அரசாங்க அலுவலகங்கள் சார்பில் கட்டடத் தொகுதியொன்றைத் தாபித்தல்
- பாராளுமன்ற பணிகளுக்குரிய அலுவலகங்கள், அரசியலமைப்பு ரீதியில் தாபிக்கப்பட்டுள்ள தேசிய ஆணைக்குழு அலுவலகங்கள், அமைச்சரவை அலுவலகம் உட்பட வேறு ஒத்த அரசாங்க அலுவலகங்கள் சார்பில் ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டை பிரதேசத்தில் யப்பான் நட்புறவு வீதிக்கு அருகாமையில் உள்ள காணியில் கட்டடத் தொகுதியொன்றை நிருமாணிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. 35,000 சதுர மீட்டர் கொண்ட கட்டட வசதி, 15,000 சதுர மீட்டர் பொது வசதி, வாகன தரிப்பிட வசதி உட்பட ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளுடன் மூன்று வருட காலப்பகுதிக்குள் இந்த கட்டட தொகுதியானது நிருமாணிக்கப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது, இந்த கருத்திட்டத்திற்குரிய பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் கொள்கையளவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.