2018-02-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
நிலைபேறுடைய நகர அபிவிருத்திக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் - மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் திறமுறை நகர அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கண்டி, காலி, யாழ்ப்பாணம், அநுராதபுரம், பொலன்நறுவை, திருகோணமலை, மட்டக்களப்பு, பதுளை, இரத்திணபுரி, மாத்தறை, குருநாகல், நுவரெலியா மற்றும் தம்புள்ளை ஆகிய 13 நகரங்கள் "திறமுறை நகரங்கள்" ஆக அபிவிருத்தி செய்வதற்கு இனங்காணப்பட்டுள்ளது. இதன் கீழ் நடைமுறைப் படுத்தப்படும் "நிலைபேறுடைய நகர அபிவிருத்திக் கருத்திட்டத்தின்" மூலம் நாடு முழுவதும் விரிவடைந்துள்ள உயர் அபிவிருத்தியுடனான பொருளாதார வலையமைப்புக்கு உரியதாகும். கொழும்புக்கு வௌியே அமைந்துள்ள நகர கேந்திர நிலையங்கள் அபிவிருத்தி செய்யப்படும். இதன்போது நகரங்களுக்கு இடையில் அடிப்படை சேவைகளை விருத்தி செய்வதன் மூலம் பாரிய உட்கட்டமைப்பு வசதிகளில் காணப்படும் இடைவௌியை குறைத்தல், நகர கேந்திர நிலையங்களுக்கிடையில் போக்குவரத்து மற்றும் இணைப்புகளை விருத்தி செய்தல், நகர வசதிகளை விருத்தி செய்தல், உள்நாட்டு மரபுரிமைகளை பாதுகாத்தல், மழை நீர் வடிகாலமைப்பு முகாமைத்துவம், திண்மக் கழிவு முகாமைத்துவம், துப்பரவேற்பாடு மற்றும் தொடர்புபட்ட பணிகள் போன்ற சுற்றாடல் பாதுகாப்பினை விருத்தி செய்தல், இந்த நகரத்தில் வசதிப்பதற்கான ஆற்றலை விருத்தி செய்தல் போன்றவற்றின்பால் கவனம் செலுத்தப்படும். இதற்கமைவாக உத்தேச நிலைபேறுடைய நகர அபிவிருத்திக் கருத்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கும் இதற்கு தேவையான நிதியினை பெற்றுக் கொள்வதற்குமாக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |