• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-02-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நடுத்தர வருமானம் பெறுவோருக்கான வீட்டுக் கடன் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்
- முதற் தடவையாக வீடொன்றினை கொள்வனவு செய்யும் நடுத்தர வருமானம் பெறுபவர்களுக்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினாலும் நகர அபிவிருத்தி அதிகாரசபையினாலும் நடைமுறைப்படுத்தப்படும் வீடமைப்பு அபிவிருத்தி கருத்திட்டங்களிலிருந்து வீடொன்றினை கொள்வனவு செய்வதற்காக சலுகை வட்டியின் கீழ் நிதி வசதிகளை வழங்குவதற்கு 2018 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் பிரேரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக கடனை மீண்டும் செலுத்தும் உச்ச கால எல்லையானது 25 வருடங்களுடன் 5 மில்லியன் ரூபா என்னும் உச்சம் வரை தேசிய சேமிப்பு வங்கியின் ஊடாக கடன் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன்போது முதல் 5 ஆண்டுகளுக்கு 7 சதவீதமான சலுகை வட்டி விகிதாசாரத்தின் கீழ் இந்த கடன் வழங்குவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதன் போது குறித்த வங்கிக்கு செலுத்தப்பட வேண்டிய மீதி 5 சதவீதமான வட்டியானது அரசாங்கத்தினால் ஏற்கப்படும். இந்தக் கடன் திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கு தேசிய சேமிப்பு வங்கியுடன் உரிய உடன்படிக்கைகளை செய்து கொள்ளும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.