• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-02-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மீதொட்டமுல்ல திண்மக்கழிவுகள் அகற்றப்படும் இடத்தில் நிகழ்ந்த மண்சரிவின் காரணமாக அப்புறப்படுத்தப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு 50,000/- ரூபாவைக் கொண்ட கொடுப்பனவொன்றை வழங்குதல்
- மீதொட்டமுல்ல திண்மக்கழிவுகள் அகற்றப்படும் இடத்தில் நிகழ்ந்த மண்சரிவின் காரணமாக பாதிக்கப்பட்ட மற்றும் அபாய வலயத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு மாற்று வீடுகளையோ அல்லது வீடுகளுக்கான நட்டஈட்டினையோ வழங்கும் வரை வாடகையினை செலுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று இந்த பிரதேசத்தில் அபாய வலயத்தினுள் உள்ள வீடுகள் அமைந்துள்ள காணிகள் மற்றும் மண்சரிவு காரணமாக சேதமடைந்த வீடுகள் அமைந்துள்ள காணிகள் ஆகியவற்றை அரசாங்கத்திற்கு உடைமையாக்கிக் கொள்வதற்கும் சேதமடைந்த பிரதேசத்தினுள் அமைந்துள்ள தனியார் காணிகளுக்கும் நட்டஈடு செலுத்துவதற்கும் அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மாற்று வீடுகளை பெற்றுக் கொள்ளாத அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட அல்லது அபாய வலயத்தினுள் வீடுகள் அமைந்துள்ள இதுவரை வீடுகளுக்கான மதிப்பீட்டு நட்டஈடு வழங்கப்படாத தனியார் காணி உரிமையாளர்களுக்கு அவர்களுடைய காணிகளின் பெறுமதியை மதிப்பிடும் பணியியை பூர்த்தி செய்து நட்டஈடு வழங்கும்வரை வீட்டுக்கூலி கொடுப்பனவினை தொடர்ந்தும் வழங்குவது தேவையானதென தெரிய வந்துள்ளது. இதற்கமைவாக இவ்வாறு இனங்காணப்பட்டுள்ள 60 குடும்பங்களுக்கு மாதமொன்றுக்கு 50,000/- ரூபா வீதம் தொடர்ந்தும் வீட்டு வாடகைக் கொடுப்பனவினை வழங்கும் பொருட்டு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.